Search This Blog

Aug 28, 2011

குழந்தை-by Ravindran Ravi


குழந்தை
இல்லத்தில் அமர்ந்திருந்த போது
மனமோ சோகத்தில் மூழ்கியிருந்தது
செய்வதறியாது திகைத்திருந்தபோது,
மன எண்ணங்கள் அலைபாய்ந்தது,
திடீரென
மழலையின் சிரிப்பிற்கே
உரித்தான சிரிப்புடன்
வேகமாக தவழ்ந்து
வந்த மழலையை
அள்ளி அணைத்திடும்
முன்னரே
என் உடல் மீது ஏறி
விளையாடதொடங்கிவிட்டது
அதன் பிஞ்சு விரல்கள்,
என் உதடுகளையும்,
கன்னங்களையும்,
வருடியதுமே
மெய்மறந்து
போனேன்,
தன்னிலை
மறந்தேன்.
அதன் வாயினில்
உமிழ்ந்த உமிழ்நீரோ
சில்லென
என் உடல் மேல்பட்டு
அபிசேகம் செய்திருந்தன
மார்பை,துடைத்திடவும்
மனமின்றி
சிலையாகிபோயிருந்தேன்
அது தந்த முத்தத்தினால்,
என் மனமோ
குழந்தையாகி
விளையாடியது

மழலையுடன்,
மனதிலிருந்த
சோகமோ
திசைதெரியாமல்
போய்விட்டிருந்தது
மனமோ மழலையுடன்
ஒன்றிவிட்டிருந்தது.

ஆ.ரவிந்திரன்....எனது  படைப்பு (by Ravindran Ravi on Sunday, July 31, 2011 at 2:25am)


மனதிற்கு பிடித்த - படித்த பனித்துளிகள், நண்பர் ரவி அவர்களின் படைப்பில்...அன்புடன் கே எம் தர்மா.....

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!