Search This Blog

Aug 28, 2011

துணிந்திடு, வென்றிடு, வாழ்ந்திடு



துணிந்திடு, வென்றிடு, வாழ்ந்திடு

by Ravindran Ravi on Thursday, July 28, 2011 at 6:16pm
உன்னைச் சுற்றிலும்
ஓ நாய்,குள்ளநரி
கூட்டங்கள்
உன் முன்னேற்றத்தின்
குரல் வளையை
கடித்து குதறிட
காத்துகிடக்கின்றன.
எச்சரிக்கையாய் இரு.
அதன் தந்திரங்களூம்
சூழ்ச்சிகளூம் உன்னை
வீழ்த்துவதர்க்கு
வியூகம் அமைக்கின்றன,
ஆனால் நீயோ
கர்ச்சிக்கும்
சிங்கமாயிற்றே!!
இந்த ஓநாய், குள்ளநரி
கூட்டங்களூக்கா
கலங்க போகிறாய்,
சலியாத கடும் உழைப்பும்,
தைரியமும்,
தன்னம்பிக்கயும்,
துணிச்சலும்
விவேகமும்,வீரமும்
விடா முயற்சியும் கொண்ட
தன்மான தமிழனல்லவா நீ,
உன்னை வென்றிட
யாரால் இயலும்!!
இதோ வாழ்வினை
வென்றிட கரம் பற்றிடு
நம் தமிழ் பெண்ணை,

இல்லறத்திற்கு
இனியவளாம்
அன்பிலும்
அறிவிலும்
கற்பிலும்
நல்ல பண்பிலும்
பாசத்திலும்
துணிச்சலிலும்
விவேகத்திலும்
புத்திசாதுர்யத்திலும்
வல்லவளாம்
நம் தமிழ் பெண்ணை
கரம் பற்றி
வாழ்வினை
வென்றிடு
வையகம் போற்றிட
வாழ்ந்திடு!!!
அமுதமளித்தவளும்
ஆன்ந்தமடைவாள்...ஆ.ரவிந்திரன்  எனது படைப்பு.

அன்பு  நண்பர் ரவீந்தரன் படைப்புக்களில் படித்தது, பிடித்தது..அன்புடன் கே எம் தர்மா...

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!