Search This Blog

Showing posts with label தியானம்-யோகா. Show all posts
Showing posts with label தியானம்-யோகா. Show all posts

Nov 16, 2011

போதிதர்மர் பற்றிய சரித்திரக்குறிப்புகளும் உபதேச சுருக்கமும்

சித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's: போதிதர்மர் பற்றிய சரித்திரக்குறிப்புகளும் உபதேச சுருக்கமும்



ஆழமான சக்திகளின் அதிசயங்களில் இதுவும் ஒன்றே!!!
காண்போமே! நாமும்தான்!! இனிய நண்பர்களே வாழ்த்துக்கள்!!!!



இன்றை திகதியில் திரையுலகம் தந்த பாதிப்பால் தமிழ் வலையுலகத்தில் தேடப்படும் சித்தர் போதிதர்மர், அவர் பற்றிய வாழ்க்கைகுறிப்புகளும் அவரது முக்கியமான உபதேச சுருக்கமும் தங்கள் பார்வைக்கு.

போதிதர்மர் சீனாவுக்கு சென்று போர்க்கலையினை கற்பித்து அந்த போர்க்கலை பல வடிவங்களை பெற்று இன்று உலகம் போற்றும் பலவிடயங்க்களை சீனா போர்க்கலையின் பெற்றுள்ளது. இது பற்றிய வரலாற்றுத்தகவல்களை பகிர்ந்து கொள்வதே இந்த பதிவில் நோக்கம்.

  • கி.பி 500 போதிதர்மரின் காலம் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
  • அவர் தியானமுறையினை போதித்துவரும் போது துறவிகள் உடல் அளவில் வலிமை இன்றி இருந்ததால் தொடங்க்கப்பட்டதே உடல் அசைவு முறைகள், பின்பு அவை போர்க்கலையாக வடிவமைக்கப்பட்டது.
  • போதிதர்மரைப்பற்றிய விபரங்கள்  Michael Spiesbach என்பவரால்  Journal of Asian Martial Arts, 1992, vol. 1, no. 4, இல் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அதன் படி;
  • போதிதர்மரின் போர்க்கலைக்கான உள்ளீடுகள் எவ்வளவு என்பது பற்றி விவாதம் பல உள்ளதாக குறிப்பிடுகிறார்.
  • போதிதர்மரைப்பற்றிய முதலாவது சரித்திர குறிப்பு Luoyang jia lan ji, (“The History of the Monasteries of Luoyang”) கி.பி 574 இல்  Yang Xuanzhi என்பாரால் எழுதப்பட்டுள்ளது. இவர் கி.பி 574 இல யொங் நிங் ஆலயதிற்கு சென்ற போது 150 வருடங்கள் முதுமையான வேற்று நாட்டவரான Sramana Bodhidharma என்பவரை கண்டதாக குறிப்பிட்டுள்ளார்
  • அடுத்த குறிப்பு Guifeng Zongni (780-841) என்ற புத்த சமய அறிஞர் தனது நுலான  Dao Zuan's Xu gao seng zhuan (“Biographies of Eminent Tang Monks”) இல் ஒரு இடத்தில் "மேற்கிலிருந்து போதிதர்மர் ஏன் வந்தால்" என்று ஒரு வசனத்தினை பதிந்துள்ளார்.
  • அடுத்த முக்கியமான ஆதாரம்  Dao Yuan's Jing de zhuan deng lu (“The Records of Transmission of the Lamp”) கி.பி 1001 இல் எழுதப்பட்டது.
  • சீனாவின் புத்த விகாரைகளின் குறிப்புகளின் படி அவர் சீனாவுக்கும் வந்த காலப்பகுதி கி. பி 520, கி.பி 470, கி.பி 420 எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
  • அவரது பயண வழிதொடர்பாக இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
1.        சென்னை, குவாங்க்சோஉ, கடல்வழியாக, பின்பு நிலதினூடு நன்சிங்க் (படம் - ௦௧).
2.        சென்னை, பாமிர் பீடபூமி, மஞ்சள் நதி ஓரமாக லூஓயாங் (படம் - 02)

சென்னை, குவாங்க்சோஉ, கடல்வழியாக, பின்பு நிலதினூடு நன்சிங்க்

சென்னை, பாமிர் பீடபூமி, மஞ்சள் நதி ஓரமாக லூஓயாங்
  • போதிதர்மர் காஞ்சிபுரத்தில் மன்னனது 3வது மகனாக பிறந்தார், ஆகவே போர்க்கலையில் வல்லமை மிகுந்த அரச குடும்பத்தில் பிறந்தார்.
  • தனது ஏழாவது வயதில் மனமே மாணிக்கம் (ஜென் கோட்பாடு) என்பதனை உணர்ந்தார்.
  • அவரது ஆசிரியர் பிரஞ்னதாரா, பெண் குரு. 
  • இதன் பின் சரித்திரக்குறிப்புகளின் படி பல்லவ மன்னன் சிம்மவர்மன் இவரை குருவாக கற்பிக்க அழைத்ததாகவும். இவர் அரிய சித்திகள் நிறைந்த யோகினியாவார்.
  • இவர் ஞானமடைந்த போதிதாரா என்ற இளவரசனை போதிதர்மன் என பெயர் மாற்றம் செயதார்.
  • குருவான பிரஞ்னதாராவின் மறைவிற்கு பின் போதிதர்மர் அவரது ஆணையின் பெயரில் சீனதேசம் பயணிக்கிறார்.
  • போதிதர்மர் அவரது போதனைகளில் அவர் சக்கரவர்த்தி Wu Dai (465-550) அவர்களின் அரச அவையில் இருந்ததாகவும், பின் அவரது ஆதரவின்மையால் Yangtze நதியினை கடந்து Luoyang சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். அங்கு அவரது போதனைகள் ஏற்றுக்கொள்ளப்படாமல் கேலி செய்யப்பட்டதாகவும், உணவுக்கு கூட வழியற்று கடைசியாக அந்த இடத்தினை விட்டு சென்றதாகவும் குறிப்புட்டுள்ளர்.
  • இறுதியாக Henan  மானிலத்தில் உள்ள Song  மலையினை அடைந்து அங்கு Shaolin Temple அமைத்து தான் கற்ற போதனைகளை சீன மொழியில் மாற்றம் செய்யும் பணியில் ஆழ்ந்தர்.
  • அவரது பிரதம சீடராக Shen Guang கற்றார்.
  • இந்த வேளையில் அவர் மாணவர்கள் உடல் வலிமையற்று இருப்பதை கண்டு, இந்திய யோக முறைகளில் ஒன்றான பிராணணை (in Chinese Chi, Japanese Ki) வசப்படுத்தும் மூச்சுப்பயிற்சியும், உடற்பயிற்சி அசைவுகளையும் வடிவமைத்து பயிற்று வித்தார்.

 போதிதர்மரின் உபதேசங்கள்
லங்கவதாரா சூத்ரா (Lankavatara Sutra) - மனதினை பயிற்சிக்குள்ளாக்கி புத்த நிலையினை அடைவது பற்றியது. போதிதர்மரின் உபதேசப்படி முதலில் கற்கை (Theory), அதாவது புத்த நிலையினை எப்படி அடைவது என்பது பற்றி கற்றல் வேண்டும், பின் பயிற்சி! பயிற்சியின் முக்கிய நோக்கம் மனதின் காம, குரோத, மாச்சர்யங்களை அழித்தல், அதன் மூலம் புத்த நிலையினை அடைதல். அவரது உபதேசங்கள் மூன்று:
1.        Bao Yen Hsin: இன்ப துன்பங்களை, ஏற்ற இறக்கங்கங்களை, புகழ்ச்சி இகழ்ச்சிகளை எதுவித காரணமும் சொல்லாமல் உள்ளதை உள்ளவாறு ஏற்றுக்கொள்ளல்.
2.        Sui Yen Hsin: அனைத்து சூழல்களும் கர்ம விதியின் படி நடக்கின்றது என்பதனை உணர்ந்து, நம்மை சுற்றி நல்ல விடயங்கள் நடக்கும் போதும், கெட்ட விடயங்கள் நடக்கும் போதும் மனதின் சம நிலை இழந்து விடாமல் இருத்தல் வேண்டும்.
3.        Tsung Fa Hsin: பயிற்சியின் மூலம் மனசமனிலையே புத்த நிலை என்பதை உணர்தல், அனுபவித்தல்.
எப்படியோ போதிதர்மர் தென்னிந்தியாவில் இருந்து சென்றார் என்று சரித்திர ஆதாரங்கள் இருக்கும் நிலையில், அவர் உலகிற்கு தந்த ஞானம் அனைவரும் அறிய வேண்டியது. அதன் அடிப்படைகள் நிச்சயமாக தாந்திரீகமும், பத்ஞசலி யோகம் என்பவற்றை சார்ந்துள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மைகள். இதில் எம்மிடமிருந்து சென்றது என்று "மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை" என்பதனை அறிந்து இவற்றை நாமும் கற்க வேண்டிய அவசியம் உண்டென்று அறிவோம். 
“Bodhidharma: meditating monk, martial arts master or make-believe?” Journal of Asian Martial Arts, 1992, vol. 1, no. 4, p. 10-27

Posted by சுமனன்

Oct 30, 2011

தியானமும், யோகமும் - ஸ்ரீ அரவிந்தரின் ஆத்ம சமர்ப்பணம் (இறுதிப் பகுதி)


அரவிந்தரின் ஆத்மா சமர்ப்பணம் (இறுதிப் பகுதி)
ஸ்ரீ அரவிந்தரின் ‘ஆத்ம சமர்ப்பணம் என்பது, ஆன்மா விடுதலை அடைய வழி செய்யும் ஒரு யோக நெறியாகும். யோகம் சித்தி பெற உதவும் உயர்ந்த சில முறைகளுள் இதுவும் ஒன்று. சமர்ப்பணம்என்ற தத்துவத்தின் ஆன்மிக அடிப்படைகளைச் சுருக்கமாகக் இறுதிப் பதிவில் தொடருகின்றது. மேலும் தொடருவோம் இனிய நண்பர்களே!!!


சமர்ப்பணம்என்ற தத்துவத்தின் ஆன்மிக அடிப்படைகளைச் சுருக்கம்: 
1.        கடந்தகால நிகழ்ச்சிகள் முடிந்து போனவை. நடந்தது நடந்ததுதான். இனி அது பற்றிச் செய்வதற்கு ஒன்றும் இல்லைஎன்ற உண்மையை நாம் ஏற்றுக் கொண்டு இருக்கின்றோம். இறையருளுக்கு அந்த உண்மையும் உட்பட்டதுஎன்று நினைக்கப் பழகிக் கொண்டால் நல்லது. நம்பிக்கை அளவற்ற பலனைக் கொடுக்கக் கூடியது.கடந்த நிகழ்ச்சிகளை மாற்ற முடியாதுஎன நினைத்தால் நம்பிக்கைக்கு இயற்கையாகவுண்டான பெரும்பலன் குறையும். அருள் கடந்ததையும் மாற்றும்என உணர்ந்தால், நம்பிக்கையின் திறம் வரையறையற்றதாக இருக்கும்.
2.        மனிதன் காலத்தால் கட்டுண்டவன். அதனால் கடந்தகால நிகழ்ச்சிகள் அவனுக்குக் கட்டுப்படா. அன்னையின் ஒளி காலத்தைக் கடந்தது. அதனால் கடந்தகால நிகழ்ச்சிகளும் அன்னையின் ஒளியைப் பெற்று, இப்பொழுது பலனாக விளைய முடியும். சமர்ப்பணத்தின் மூலம் கடந்தகால நிகழ்ச்சிகளை அன்னையின் ஒளிக்கு உட்படுத்த முடியும்.
3.        கடந்தகால நிகழ்ச்சிகளின் சுவடுகள் நம் இன்றையச் செயல்களில் படிந்திருக்கின்றன. அந்தச் சுவடுகளைப் புரிந்து கொண்டுவிட்டால் அந்தப் பழைய செயல்களையும், அவற்றின் பாதிப்புகளான இன்றையப் பலன்களையும் மாற்றலாம்.
4.        மனிதனுடைய வாழ்க்கையில் செயல்பட இறைவன் மனிதனுடைய புத்தியைக் கருவியாகப் பயன்படுத்துகின்றான். புத்தியின் செயல் அதன் குணங்களால் நிர்ணயிக்கப்பட்டது. ஆகையால் மனிதனுடைய குண விசேடங்களுக்குப் புத்தியின் செயலைச் சிறப்பாக்கும் ஆற்றல் உண்டு. உயர்ந்த குணங்களின் மூலம் இறைவன் மனித வாழ்க்கையில் சிறப்பாகச் செயல்படுகின்றான்.
5.        செயல்களின் கூறுகளும், குணத்தின் தன்மைகளும் பிரித்துப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு ஒன்றோடு ஒன்று பின்னிக் கொண்டு இருக்கின்றன.
6.        கடந்தகால நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து அவற்றை அன்னைக்குச் சமர்ப்பணம் செய்தால், கடந்தகால நிகழ்ச்சிகளின் பாதகமான பலன்கள் நீங்கும். ஆனால், அந்நிகழ்ச்சிகளுக்குக் காரணமான குண விசேடங்கள் அழியாமல் அப்படியே இருக்கும்.
7.        அந்தக் கடந்தகால மிச்சம் இன்றைய குணச் சிறப்புகளாக நம்மிடம் ஒட்டிக் கொண்டிருக்கும்.
8.        இன்றுள்ள இந்தக் குணச் சிறப்புகளிலிருந்து விடுபட முயன்றால், ஜீவன் கடந்தகால நிகழ்ச்சிகளின் இன்றையப் பலனிலிருந்து விடுதலை அடையும்.
9.        கடந்தகால நிகழ்ச்சிகளை மீண்டும் மீண்டும் சமர்ப்பணத்திற்காக நினைவு கூர்ந்தால், அவற்றின் வேகம் ஒரு கட்டத்தில் அதிகரிக்கும். அதன்பின் நிகழ்ச்சிகளின் சுவடுகளான குண விசேடங்கள் மனோவேகத்தில் மனக் கண்ணில் தோன்றும்.
10.     மரணத்திற்குமுன் ஆத்மா வெளிவந்து இப்பிறவியின் செயல்களைக் கண நேரம் விமர்சனம் செய்து, அடுத்த பிறவிக்குரிய இடத்தைத் தீர்மானிக்க முயல்கின்றது. புனர்ஜன்மம் எடுப்பதற்கு இந்த மதிப்பீடு அடிப்படையாக இருப்பதைப் போல், நாம் அன்னைக்குச் செய்யும் சமர்ப்பணம் ஒரு சிறு அளவிலான புனர்ஜன்மமாகும். எந்தச் செயலைச் சமர்ப்பணம் செய்கின்றோமோ, அந்தச் செயலின் (கர்மத்தின்) பலன்களிலிருந்து விடுதலை அடைந்து, அதைப் பொறுத்த வரையில் புனர்ஜன்மம் எடுத்த பலன் உண்டு.
11.     கடந்தகால நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து சமர்ப்பணம் செய்தால், அவற்றால் ஏற்பட்ட பிரச்சினைகள் நிச்சயமாகக் கரையும். ஆனால், நிதானமாகக் கரையும். ஆனால், அந்நிகழ்ச்சிகளுக்கு அஸ்திவாரமான உணர்ச்சிகளை (குணங்களை) நினைவு கூர்ந்து சமர்ப்பணம் செய்தால், பிரச்சினைகள் உடனடியாகவும் முழுமையாகவும் கரைந்து போகும்.
12.     ஒரு பிரச்சினையை அழிக்க வேண்டும்என்ற தீவிரமான எண்ணத்துடன் முயன்றால், அதற்குச் சமர்ப்பணம் ஒன்றே உரிய கருவி. அவ்வெண்ணம் பூரணமாகச் செயல் படும்பொழுது, மனிதனால் தீர்க்க முடியாத பிரச்சினை என்று எதுவுமே இருக்க முடியாது. 
 ஆத்ம சமர்ப்பணம் என்பது, ஆன்மா விடுதலை அடைய வழி செய்யும் ஒரு யோக நெறியாகும். யோகம் சித்திபெற உதவும் உயர்ந்த சில முறைகளுள் இதுவும் ஒன்று
..  

மேலும் பயணிப்போம் இனிய நண்பர்களே!!! 
ஸ்ரீ அரவிந்த சுவாமிகளின் ஆத்ம சமர்ப்பனத்தைத் மனதில் கொண்டு, தியானமும் யோக வழிகளை தொடர்ந்து...

தியானமும், யோகமும் - ஸ்ரீ அரவிந்தரின் ஆத்ம சமர்ப்பணம் (மூன்றாம் பகுதி)

அரவிந்தரின் ஆத்மா சமர்ப்பணம் (மூன்றாம் பகுதி)
ஸ்ரீ அரவிந்தரின் ‘ஆத்ம சமர்ப்பணம் என்பது, ஆன்மா விடுதலை அடைய வழி செய்யும் ஒரு யோக நெறியாகும். யோகம் சித்தி பெற உதவும் உயர்ந்த சில முறைகளுள் இதுவும் ஒன்று. மேலும் தொடருவோம் இனிய நண்பர்களே!!!

பெண்ணிற்குத் திருமணம் செய்தபிறகு, பெண்ணையும், மாப்பிள்ளையையும் வீட்டிலேயே வைத்துக் கொண்டால், வீட்டில் உள்ள மகனின் வாழ்வு கெட்டுப் போகும்என்று நம்பும் வழக்கம் நம்மிடம் இருக்கின்றது. அந்த மரபுப்படியும், உளவியல் தத்துவப்படியும், வேறு எந்த வகையில் பார்த்தாலும் இது தவறுதான். உற்றோரும் மற்றோரும் கூறியதை எல்லாம் புறக்கணித்துவிட்டு இந்தத் தவற்றைச் செய்தார் ஒரு தொழில் அதிபர். 15 ஆண்டுகளுக்குப்பிறகு அவருடைய மகன் திடீரென்று மரணம் அடைந்தார். மாப்பிள்ளை திவால் ஆனார். அதற்குப்பிறகே அவர் தம் மாப்பிள்ளையைத் தனியாக அனுப்பினார். வசதி உள்ளவர்கள் பெண்ணின் மீதுள்ள பாசத்தால் இதைச் செய்கின்றார்கள்.

பல ஆண்டுகளுக்குமுன் 700 ரூபாய் வருமானம் உள்ள ஒரு கல்லூரி ஆசிரியர், ரூபாய் 30,000 கடன் வாங்கினார். அவருக்குக் கடன் வாங்க வேண்டிய அவசியமே இல்லை. சிறிய குடும்பம்தான். ஆனாலும் ஆடம்பரக் குடையை விரித்துப் பழகிவிட்டார். அதனால் கடன். நாளாக நாளாக கடன் சுமை அவரை அழுத்தத் தொடங்கிவிட்டது. கவலைப்பட்டுக் கவலைப்பட்டு அவருடைய உடல் நலம் ஒரேடியாகக் கெட்டது. அவர் அன்னையின் பக்தர். அன்னையிடம் பிரார்த்தனை செய்து கொண்டார். நாளெல்லாம் அவர் செய்து கொண்ட பிரார்த்தனையால் கடன் குறைந்தது. மூச்சு முட்டும் அளவுக்கு இருந்த கடன் சுமை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து சுமக்கக் கூடிய அளவுக்கு இறங்கிவிட்டது.இனிமேல் வருமானத்திற்கு மேல் செலவு செய்வதில்லைஎன்று அவர் முடிவு செய்து கொண்டார். இந்த முடிவே அவருடைய பிரச்சினைக்கு ஏற்பட்ட முடிவாகவும் அமைந்தது.
ஒருவன் வாயைத் திறந்தால் நீதியும், நேர்மையும் கரை புரண்டோடி வரும். ஆனால், தன் சொந்த வாழ்க்கையில் தன் மனைவியைக் கண்கலங்க வைத்துவிட்டு ஒழுங்கீனமான வழியில் உல்லாசமாய் வாழ்கின்றான். பிரச்சினை பூதாகாரமாகிறது. அப்பொழுது தன் பிரச்சினையை உருவாக்கியவர்கள் தன் மனைவியும், ஊராரும் என்றுதான் நினைக்கின்றானே தவிர, பிரச்சினைக்குக் காரணமானவனே தான்தான் என்பது அவனுக்குப் புரிவதில்லை. 

அதாவது, ஊர் அறிந்ததை அவன் அறியவில்லை. மன்னிக்க முடியாத குணக் கேடுகளால் ஒருத்தியை ஒருவன் விலக்கி விடுகின்றான். எல்லோருக்கும் அவளுடைய குணக்கேடுதான் அதற்குக் காரணம் என்பது புரிகின்றது. ஆனால், அவளுக்கு மட்டும் அது புரியாமல் போகின்றது! இன்னோர் சாரார் இருக்கின் றார்கள். அவர்கள் தம்மைப் பற்றி மற்றவர்கள் புரிந்து கொண்டிருப்பதற்கு எதிர்மாறாகப் புரிந்து கொள்வார்கள். வாய் ஓயாமல் பேசும் ஒரு வியாபாரி, “நான் அளந்துதான் பேசுவேன். அவசியம் இல்லாமல் ஒரு வார்த்தைகூடப் பேச மாட்டேன்என்பார். 

பிறர் பொருளுக்கு நான் ஆசைப்பட மாட்டேன்என்று தம்மைப் பற்றி உண்மையிலேயே நினைக்கக் கூடிய ஒருவர், தம் வியாபார நண்பர்களை அணுகி, “உங்கள் வியாபாரத்தை எனக்குக் கொடுத்துவிடுங்கள்என்கின்றார். திறமை சிறிதும் இல்லாத, ஆனால், இனிமையாகப் பழகக் கூடிய ஒருவர், தம்மைச் சிறந்த திறமைசாலி என்று நம்புகின்றார்.

கண்ணுக்கு முன்னால் காட்சியாக இருக்கும் விளக்கத்தைப் பார்க்க மறுத்து, இல்லாத ஒன்றை இருப்பதாக நம்புகின்றவர்கள் இன்னொரு வகையினர். தம்முடைய திருட்டுக் கணக்குப் பிள்ளையை விசுவாசத்தோடு வேலை செய்வதாக நினைக்கும் முதலாளி, அடுத்துக் கெடுக்கும் ஒருவரைத் தம் சிறந்த நண்பராகக் கருதும் அப்பாவி, மேலதிகாரியிடம் பொய்ப் புகார்களைக் கூறி வேலைக்கு வேட்டு வைக்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் ஒருவரை ஆபத்பாந்தவர்என்று நம்பும் ஏமாளி போன்றவர்கள், இந்த வகையில் வருவார்கள். நேர்மையாக இருந்ததாலேயே என் வேலை போய்விட்டதுஎன்று ஒப்பாரி வைப்பவர்களையும் இந்த வகையில் சேர்க்கலாம்.

நேர்மையே உயர்ந்தது. இதில் கொஞ்சம்கூடச் சந்தேகம் இல்லை. ஆனால், ‘அது ஆபத்தானதுஎன்பதையும் மறுப்பதற்கில்லை. காந்திஜியைவிட நேர்மையானவர் இந்த உலகில் உண்டா? அவருடைய முடிவு ஆபத்தில்தான் முடிந்தது. நேர்மையோடு விழிப்பும் வேண்டும். இல்லாவிட்டால், அது பார்வையற்ற விழிகளுக்குச் சமானம். இவர்களைப் போன்றவர்கட்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டால், பிரச்சினையின் மூல காரணத்தை அவர்களால் அறிய முடியாது. அப்பொழுது அன்னையிடம் பிரச்சினையின் வரலாற்றைச் சொன்னால், அவர் காரணத்தைத் தெளிவுபடுத்துவார். அல்லது பிரச்சினையை விலக்குவார்.

இத்தகையோர் அன்னைக்குப் பிரார்த்தனை செய்து கொண்டால், உண்மையான காரணத்தைப் புரிய வைக்கக் கூடிய நிகழ்ச்சிகள் நடக்கும். அநேக ஆண்டுகளுக்குமுன் அரசுப் பணியை விட்டுவிட்டு, மாமனார் சொத்துக் கொடுப்பார் என்ற எண்ணத்தால் மாமனார் வீட்டில் போய்த் தங்கி, மாமனாரின் சொத்துகளைப் பன்மடங்காகப் பெருக்கி, பின்னர் அதில் ஒரு பங்கைப் பெற்று, மைத்துனரிடமிருந்து பிரிந்து வந்து, பிற்காலத்தில் வாழ்க்கையில் எந்தப் பக்கம் திரும்பினாலும் பிரச்சினையாக இருப்பதைப் பார்த்த ஒருவர், தாம் அடிப்படையில் செய்த செயல் சரி இல்லாதது என்பதைத் தெரிந்து கொள்ள இயலாதவராக இருக்கின்றார். இத்தனைக்கும் அவர் அன்னையின் பக்தர்! பிரார்த்தனை எல்லா விஷயங்களிலும் பலிக்கின்றது. ஆனால், அடிப்படையான பிரச்சினையில் மட்டும் வழிவிடவில்லைஎனக் குறைப்படுகின்றார் அவர்.இவர்களுக்கெல்லாம் உகந்த முறை சமர்ப்பணமாகும்.

சமர்ப்பணம்என்ற தத்துவத்தின் ஆன்மிக அடிப்படைகளைச் சுருக்கமாகக் அடுத்த இறுதிப் பதிவில் தொடருகின்றது.ஆத்ம சமர்ப்பணம் என்பது, ஆன்மா விடுதலை அடைய வழி செய்யும் ஒரு யோக நெறியாகும். யோகம் சித்தி பெற உதவும் உயர்ந்த சில முறைகளுள் இதுவும் ஒன்று.  மேலும் பயணிப்போம் இனிய நண்பர்களே!!! ஸ்ரீ அரவிந்த சுவாமிகளின் ஆத்ம சமர்ப்பனத்தைத் தொடர்ந்து...