Search This Blog

Jul 10, 2011

108 சித்தர்களும் அமைந்துள்ள இடங்களும்.

சித்தர்களையும், அவர்களின் சித்துக்களையும் சிந்தனைகளையும் அறிந்து கொள்வோம்

சித்தர்களை அறிந்துகொள்வோம்:-சித்தர்கள் யாவரும் சாதி மத வேறுபாடுகளை ஒழிக்கப் தங்களின் சிந்தனைகளை, அனுபவங்களை பாடல்களாக பாடிச் சென்றுள்ளனர்.  உலகம் யாவுமே மனித குலம் ஒன்றே எனவும், ஒருவனே தேவன் என்பதனையும் உபதேசித்து மூட நம்பிக்கைகளை விரட்ட பாடியுள்ளார்கள். சித்தர்கள் மனித குத்தை சாதி மதங்களால் பிரித்தவர் களையும் இன உணர்வுகளைத் தூண்டி பிரிப்பவர்களையும் மிகவும் கடுமையாகச் சாடி பலபாடல்களை புனைந்தவர்கள் . அவர்களின் பாடல்களில் உள்ள பரி பாஷையை, இரகசியங்களை, உண்மையான கருத்துக்களையும் அதன் விளக்கங் களையும் அனைவரும் அறிந்து கொண்டு சித்தர்கள் வழியில் உண்மையாக வாழவேண்டும் என்ற எண்ணத்தில் இப்பகிர்வினை தொடராகப் பதிவு செய்ய எண்ணியுள்ளேன்.
 
ஓங்காரம் :
ஓம் அ +ம் = உகாரம், அகாரம், மகாரம். ஓம் என்பதே வாளையாகும். ஒம்காரத்தினுள்ளே அனைத்தும் ஒடுங்கி ஒம்காரத்தினாலேயே யாவும் தோன்றி நடந்து வருகின்றது. இதனை உபதேச வாயிலாக உட்பொருளை அறிந்து கொள்ளல் வேண்டும். வாளையின் அட்சரம் ஆ = ஹூ, ஹீ(அ,உ,இ,கூ,கீ).

எட்டிரண்டு: 
யோக ஞானத்திற்கு அடிப்படையாய் இருப்பதே ஒம்காரத்துள்ளிருக்கும் எட்டு இரண்டு. இதற்கான விளக்கம் ஆகாயத்தைப் போல விரிவடைந்து கொண்டே இருக்கும். இதைப் பற்றி இயம்பாத சித்தர்களே கிடையாது. இதன் விளக்கம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
எட்டும் ...............................இரண்டும்
அ .......................................... உ
சிவன் ................................. சக்தி
நாதம்.................................. விந்து.
உடம்பு................................ உயிர்.
சூரியன்............................... சந்திரன்.
வலதுகண்........................ இடது கண்
பிங்கலை.......................... இடகலை.
அபானன்........................... பிராணன்.
அமுரி................................. உபரி.
அகண்டம்......................... உலகம்.
அகாரம்.............................. உகாரம்.
இன்னும் பலவிதமாக சித்தர்கள் இதனை எட்டிரண்டு என்பர்.

ஓரெழுத்து:
 

(.) இந்த புள்ளி என்பதுவே ஓரெழுத்து, ஊமை எழுத்து, பேசா எழுத்து, அது பேசும் எழுத்தாகும் பொது சிகாரமாகியது. இச்சிகாரமே யாவிற்கும் தலையாகவும்,  ஆதியாகவும், அனாதியாகவும், அந்தமாகவும் உள்ளது. இதனை மெய்குருவிடம் உபதேசமாகப் பெற்று அறிந்து கொள்ளல் வேண்டும்.

பஞ்சாட்சரம்:

மந்திரம்: ஓம்....மூலாதாரம்,   
சக்கரகமலம்:   குண்டலினி     தெய்வ சக்தி: கணபதி,                                          இதழ்-குதம்.
சக்கர கமலம்:  சுவட்டானம்,  தெய்வ சக்தி: பிரம்மா-சரஸ்வதி,                இதழ்-அடிவயிறு,    பூதங்கள்: மண்,         வண்ணம்: மஞ்சள்.
சக்கர கமலம்:  மணிப்பூரகம், தெய்வ சக்தி:விஷ்ணு-லெட்சுமி,                 இதழ்: -தொப்புழ்,      பூதங்கள்: நீர்,               வண்ணம்: வெண்மை.
சக்கர கமலம்: அனாகதம் ,        தெய்வ சக்தி:ருத்ரன்-துர்க்கை,                       இதழ்: நடுமார்பு,       பூதங்கள்: நெருப்பு, வண்ணம்: சிகப்பு.
சக்கர கமலம்: விசுத்தி ,              தெய்வ சக்தி:மகேஸ்வரன்-மகேஸ்வரி, இதழ்: கழுத்து,           பூதங்கள்:காற்று,      வண்ணம்: பச்சை.
சக்கர கமலம்: ஆஞ்ஞா,              தெய்வ சக்தி:சதாசிவன்-மனோன்மணி, இதழ்: நெற்றி,            பூதங்கள்:ஆகாயம், வண்ணம்: நீலம்.

மெய்ப்பொருள்:

 
மெய்ப்பொருளை உணர்த்த, உணர்ந்து கொள்ள வேண்டும். இதை வெளிப்படையாக சொன்னால் தலை வெடிக்கும் என்பது சித்தர்கள் சாபம். ஆதலால் இதனை உங்கள் உடம்பிலேயே அறிந்து, உண்மையை உணர்ந்து, அனுபவித்து, தெளிந்து கொள்ள வேண்டும். மெய்ப் பொருளை முப்பொருள் உண்மையாக சொல்வார்கள். நம் உயிரில் சூட்சமமாக உள்ளதே அது.

ஆதி--அநாதி--அந்தம்.

முதல்-நடு-முடிவு.
அது மெய்ப்பொருள்.
பொருள்--பசுபதி--பாசம்.
அவன்-- அவள்--அது.
பிரம்மம்--பூஜ்ஜியம்-- பூரணம்.
சாகாக்கால்-வேகாத்தலை-போகாப்புனல்.
அண்டக்கல்--பி
ண்டக்கல்--நெஞ்சக்கல்.
ஆண்--பெண்--அலி.
சிவம்--சைவம்--பரம்.
மோனம்--ஞானம்--ஜோதி.
கட்டாதலிங்கம்--வெட்டாதலிங்கம்--எட்டாதலிங்கம்.
சிவன்--திருமால்--பிரம்மன்.

108 சித்தர்கள் இன்றளவும் அமர்ந்து வழி காட்டும் ஆலயங்கள், அபூர்வ தகவல்கள்:

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் இறைவனை நாடி, செய்யும்  அனைத்திலும் இறையே உள்ளது, என்கிற மனப்பன்மையுடன் வாழ்ந்து, இறைவனுக்கு அடுத்த நிலைமையான சித்த நிலைமையை அடைந்தவர்கள். இறை தரிசனம் கண்டு, இறையுடன் இரண்டறக் கலந்து, இன்றும்  நாடி வரும் பக்தர்களை நல்வழிப்படுத்தும் அவதார புருஷர்கள் சித்தர்கள். மனிதர்களாய் பிறந்ததற்கே வாழ்வில் ஒரு அர்த்தம் உள்ளது. தன்னையறிதல் முதல் படி, அதன் பிறகு, மற்ற அனைத்தும், உங்களுக்கே வசப்படும்.  மனித பிறவியின் நோக்கம், வெறுமனே வாழ்ந்து, மடிந்து போவது அல்ல. பிரவ்வி நோக்கம் அறிவதற்கு, கீழே கொடுக்கப் பட்டுள்ள -சித்தர்கள் அமைந்திருக்கும்-ஆலயங்கள், அவர்களின் ஆத்மா சக்தி உங்களுக்கு வழி காட்டும்.

108 சித்தர்கள்


 1. திருமூலர் - சிதம்பரம்./ 2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி./ 3. கருவூர்சித்தர் கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்./ 4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்./ 5. கொங்கணர் - திருப்பதி, திருமலை/ 6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்/ 7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை./8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்./ 9. அகத்தியர் திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்./ 10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)/ 11. கோரக்கர் பேரூர்./ 12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.

13.சிவவாக்கியர் - கும்பகோணம்./ 14. உரோமரிசி - திருக்கயிலை/ 15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்./ 16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை/ 17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை/18. பதஞ்சலி சித்தர்-சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்./ 19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்./ 20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்/ 21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்./ 22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்./ 23. இராமதேவ சித்தர் - அழகர் மலை/ 24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்

25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர்./ 26. காசிபர்-ருத்ரகிரி/27. வரதர் - தென்மலை/ 28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர்./ 29. தன்வந்தரி வைத்தீஸ்வரன் கோவில்/ 30. நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி./ 31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்./ 32. விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி./ 33. கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்./34. கமல முனி - ஆரூர்/ 35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம்./36. சுந்தரர்-வாரிட்சம், திருவாரூர்.

37. காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள்./ 38. வான்மீகி-எட்டிக்குடி, திருவையாறு./ 39. அகப்பேய் சித்தர்-திருவையாறு, எட்டிக்குடி./ 40. பட்டினத்தார் - திருவொற்றியூர்./ 41. வள்ளலார் - வடலூர்./ 42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி./ 43. சதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்./ 44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்/ 45. ராகவேந்திரர் - மந்திராலயம்./ 46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்./ 47. குமரகுருபரர் - காசி./ 48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.

49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்./ 50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி./ 51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்./ 52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம்./ 53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா./ 54. யுக்தேஸ்வரர் - பூரி./ 55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை/ 56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன./ 57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி./ 58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி./ 59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி./ 60. ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.

61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்./ 62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல்./ 63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி./ 64. இராமதேவர் - நாகப்பட்டிணம்./ 65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை./ 66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்./ 67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது./ 68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி./ 69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது./ 70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு./ 71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி./ 72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.

73. கம்பர் - நாட்டரசன் கோட்டை./ 74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்./ 75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்./ 76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது./ 77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்./ 78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை./ 79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது./ 80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே./ 81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்./ 82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது./ 83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்./ 84. கதிர்வேல் சுவாமிகள் ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.

85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது./ 86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்./ 87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்./ 88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை./ 89. வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது./ 90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி./ 91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்/ 92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை./ 93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை./ 94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்./ 95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்./ 96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.

97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்./ 98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி/ 99. வன்மீக நாதர் - எட்டிக்குடி./ 100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்./ 101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது./ 102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை./ 103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை./ 104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்./ 105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்./ 106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)/ 107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி./108. பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்.

5 comments:

  1. sir you are doing well please keep it up

    ReplyDelete
  2. மிக்க வந்தனமும் வாழ்த்துக்களும் நண்பர் கௌரிபாலன் அவர்களே!!! மேலும் பல தலைப்புக்களின் எனது பதிவுகளைக் கண்டு கருத்தினை பகிர வேண்டுகின்றேன். நன்றி.!!!

    ReplyDelete
  3. கருத்துக்கள் பதிவு நன்று.

    ReplyDelete
  4. [ma ]மிக்க மகிழ்ச்சி நண்பரே இளங்கோ அவர்களே!! வாழ்த்துக்கள்!!![/ima]

    ReplyDelete
  5. மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!