Search This Blog

Dec 15, 2011

கார்நாற்பது : பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்



கார்நாற்பது - (பதினெண் கீழ்க்கணக்குத் தொகுப்பு)  : தமிழும் இலக்கியங்களும்

தமிழகத்தில் சங்கம் மருவிய காலகட்டத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை.  பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில்தான் அகம், புறம் தவிர அறநூல்களும் உள்ளது. இவ்வகை அறநூல்கள் எந்த காலத்திலும் ஏற்புடைய தாகும். இணைய வெளிகளில் சில தளங்களில் இந்த நூல்களைப் படிக்கலாம் என்றபோதும் பரவலாக மக்கள் மத்தியில் சேர்வதில்லை.
நூல்வகைகள்: பதினெண் கீழ்கணக்கு நூல்கள் குறித்த வெண்பா: 


நாலடி,நான்மணி,நா நாற்பது,ஐந்திணை,முப்
பால்
,கடுகம், கோவை,பழமொழி, மா மூலம்,
இன்னிலைந் காஞ்சியோடு,ஏலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க்கணக்கு".

இத்தொகுதியில் அடங்கிய நூல்களுள் பெரும்பாலானவை நீதி நூல்களாகும். பதினோரு நூல்கள் இவ்வகையைச் சார்ந்தவை. ஆறு நூல்கள் அகத்திணை சார்பானவை. ஒன்று மட்டும் புறத்திணை நூல். இந்நூல்கள் அணைந்ததும் சிறு பாடல்களால் ஆனவை. கூடிய அளவாக நான்கு அடிகளை மட்டுமே கொண்டவை..
நீதி நூல்கள்: திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னாநாற்பது, இனியவைநாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஏலாதி, முதுமொழிக்காஞ்சி, ஆகிய பதினோரு நூல்கள்.
 
அகத்திணை நூல்கள்: ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார்நாற்பது ஆகிய ஆறு நூல்கள்.

புறத்திணை நூல்கள்: களவழி நாற்பது - ஒரு நூல் மட்டுமே.

*********************************************************************************
கார்நாற்பது: அகத்திணை நூல்.

பண்டைக்காலத் தமிழரின் அக வாழ்க்கையின் அம்சங்களைத், தன்னைப் பிரிந்து வேற்றூர் சென்ற தலைவனின் வருகைக்காகப் பார்த்திருக்கும் தலைவியின் ஏக்கத்தினூடாகக் கார்காலப் பின்னணியில் எடுத்துக் கூறுகின்ற நூல் கார் நாற்பது. அகப் பொருள் சார்ந்தது. மதுரையைச் சேர்ந்த கண்ணங் கூத்தனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. 

சங்கம் மருவிய காலத் தமிழ் இலக்கியத் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று. கார்காலத்தின் இயற்கை நிகழ்வுகளையும், அக்காலத்தில் நிகழும் பண்பாட்டு நிகழ்வுகளையும், தலைவியின் மனநிலையோடு சேர்த்து இந்நூலில் எடுத்துக்கூறப்படுகின்றது.

எடுத்துக்காட்டு:
கார்காலத் திருவிழாக்களில் ஒன்றான கார்த்திகை விளக்குத் திருவிழாவின் போது மக்கள் ஏற்றி வைத்துள்ள விளக்குகளைப் போல, வரிசையாக எங்கும் பூக்கள் பூக்கும் படியாகத் தலைவனின் வருகையை அறிவிக்கும் தூதாக மழை வந்துள்ளது என்னும் பொருளில் வரும் இந் நூற் பாடல் இது:

நலமிகு கார்த்திகை நாட்டவ ரிட்ட
தலைநாள் விளக்கிற் றகையுடைய வாகிப்
புலமெலாம் பூத்தன தோன்றி சிலமொழி
தூதொடு வந்த மழை.
**************************************

கார் நாற்பது:

முகவுரை சிறப்புப் பாயிரம் செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை மேல்  அடுத்தப்பக்கம்
இனிய  நட்புக்களே மேலே காணும் இணைப்புக்களை சொடுக்கி முகவுரை, சிறப்புப் பாயிரயம், செய்யுளின் அகரவரிசை முதற்குறிப்பு, முதல் பக்கம் மற்றும் அடுத்தப் பக்கங்களில் 40 பாடல்களை விளக்கங்களுடன் காணலாம்.
***********************************************************
கார் நாற்பது  முகவுரை சிறப்புப் பாயிரம் செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை மேல்  அடுத்தப்பக்கம்
************************************************************* 
 
.மேலும் பயணிப்போம் இனிய நட்புக்களே!! தமிழ் சங்க இலக்கியங்களைத் தேடி. அடுத்து நாம் காணப் போவது ஐந்திணை ஐம்பது  அன்புடன் கே எம் தர்மா...
 

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!