Search This Blog

Dec 2, 2011

சிவவாக்கியம் (216-220) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (216-220)

சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!

சித்தர் சிவவாக்கியம் - 216
அணுத் திரண்ட கண்டமாய் அனைத்து பல் யோனியாய்
மனுப் பிறந்து ஓதி வைத்த நூலிலே மயங்கு
றீர்
சனிப்பது ஏது சாவது ஏது தாபரத்தின் ஊடு போய்
நினைப்பது ஏது நிற்பது ஏது நீர் நினைந்து பாருமே!

அணுக்களால் திரண்டு உருவானது உடம்பு, அது இவ்வுலகில் அனைத்தும் பலவிதமான உயிரி
ங்களாக விளங்குகின்றது. நாள் வகை யோனிகளால்  வெளிவரும் உயிரில்தான் மனிதன் பிறக்கின்றான். இப்படி வந்த மனிதர்களின் அறிவில் உதித்த மனுதர்மம், சாஸ்திரங்கள் போன்ற நூல்களைப் படித்து உண்மையை உணராது மயங்குகின்றீர்கள். ஆத்மா பிறப்பதோ இறப்பதோ இல்லை. ஒன்று மற்றொன்றாக மாறி வருகின்றது. இவை யாவும் நன்குணர்ந்து தன்னை அறிந்து தற்பரமாய் இருக்கும் பரம்பொருளை பற்றி நினைவாக நினைப்பது எது? என்றும் நிலையாக நிற்பது எது என்பதையும் அது நீராக இருப்பதுவே என்பதையும் உணர்ந்து அவ்விடத்திலேயே தியானியுங்கள். நினைவுதனை நினைவு கொண்டு நினைந்து பாருங்கள். 
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -217 

ஆதியாகி அண்டரண்டம் அப்புறத்தும் அப்புறம்
சோதியாகி நின்றிலங்கு சுருதி நாத சோமனை
போதியாமல் தம்முளே பெற்றுணர்ந்த ஞானிகள்
சாதிபேதம் என்பதொன்று சற்றுமில்லை இல்லையே!!!

ஆதியாக அண்டங்கள் யாவிலும் தோன்றி அப்பாலுக்கப்பாலாய் நின்று சோதியாக இயங்கும் ஈசனை சுருதியுடன் கூடிய இசையோடும் நாதலயமாகவும் தனக்குள் யாரும் போதிக்காமல் ஓதாதுணர்ந்த மெய் ஞானிகள் சோமசுந்தரனையே தியானித்திருப்பார்கள். அவர்கள் எல்லோருக்குள்ளும் இறைவன் இருப்பதை உணர்ந்
தால் சாதி பேதம் என்பதை எங்கும் எப்போதும் யாரிடமும் பார்க்கமாட்டார்கள். சற்றும் பேதம் இல்லாது விளங்கும் பரம்பொருளையே அனைவரிடமும் பார்ப்பார்கள்.
 
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -218
ஆக்கை முப்பது இல்லையே ஆதி காரணத்திலே
நாக்கை மூக்கையுள் மடித்து நாத
நாடி யூடு போய்
எக்கறுத்தி  ரெட்டையும் இ
றுக்கழுத்த வல்லிரே
பார்க்க பார்க்க திக்கெல்லாம் பரப்பிரம்மம் ஆகுதே!! 

ஆக்கை என்ற வாழ்வில் ஆதியான ஆன்மாவிற்கு மூப்பு என்பதில்லை. ஆன்மா ஆதியாக இருப்பதால் உடம்பு மூப்பு அடைந்தாலும் அது என்றும் இளமையோடே இருக்கின்றது. நாக்கை உள் மடித்து உண்ணாக்கில் வாசியை வைத்து ஊதி நாதத்தை உண்டு பண்ணி நடு நாடியான சுழுமுனை  வாசலைத் திறக்கவேண்டும். இடகலை பிங்கலையாக ஓடும் மூச்சுக் காற்றை எக்கி எட்டு ரெண்டு அட்சரத்தால் இறுக்கி சுழுமுனையில் வாசியை அழுத்தி தியானிக்க வல்லவர்கள் ஆனால் தவம் கூடி மெய்ப்பொருளில் சேர்ந்து பார்க்கும் திசைகளில் எல்லாம் பரப்பிரம்மம் காட்சி தரும் நீயே அதுவாக ஆவாய்.
  
****************************************************
சித்தர் சிவவாக்கியம் - 219
அஞ்சும் அஞ்சும் அஞ்சும் அஞ்சும் அல்லல் செய்து நிற்பதும்
அஞ்சும் அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே அமர்ந்துளே இருப்பதும்
அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே ஆதரிக்க வல்லிரேல்
அஞ்சும் அஞ்சும் உம்முளே அமர்ந்ததே சிவாயமே!

மானுட உடம்பில் ஐந்து பூதங்களும் ஐந்து புலன்களும் ஐந்து கோஷங்களும் ஐந்து அவஸ்தைக
ளாகவும் இருந்து அல்லல் செய்து நிற்கிறது. அஞ்செழுத்தே நமசிய என்ற பஞ்சாட்சரமாக அமர்ந்து நமக்குள் இருக்கின்றது. ஐந்து பூதங்களாகவும் ஐந்து புலன்களில் இயங்கும் அஞ்செழுத்தை நமசிவய என்று உச்சரித்து செபித்து தியானிக்க வேண்டும். அஞ்செழுத்தின் உட்பொருள் யாவையும் நன்கு உணர்ந்து உடலையும் உயிரையும் பாதுகாத்து அஞ்செழுத்தை ஓதி வருபவர்க்கு அஞ்செழுத்தும் ஐந்து வண்ணங்களாக இருந்து உனக்குள்ளேயே உகாரமாக அமர்ந்திருப்பது மெய்ப் பொருளாக விளங்கும் சிவமே என்பதை அறிந்து அஞ்செழுத்தால் தியானம் செய்யுங்கள்.
     

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 220
அஞ்செழுத்தின் அனாதியாய் அமர்ந்து நின்றது ஏதடா
நெஞ்செழுத்தி நின்று கொண்டு நீ செபிப்பது ஏதடா
அஞ்செழுத்தின் வாளதால் அறுப்பதாவது ஏதடா
பி
ஞ்செழுத்தின் நேர்மைதான் பிரிந்துரைக்க வேண்டுமே!!!
 
அஞ்செழுத்தில் ஓர் எழுத்தாய்  அனாதியாய் அமர்ந்து நின்றது சிகாரமே. அதை நெஞ்சமாகிய அனாகத சக்கரத்தில் நின்று சிவயநம என செபிக்க வேண்டும். இது பஞ்சாட்சரமாக பிஞ்செழுத்து எனும் ஊமைஎழுத்தாக இருப்பதை உணர்ந்து அங்கேயே மனதை நிறுத்தி நினைவால் நமசிவய, சிவயநம, யநமசிவ, மசிவய
, வயநமசி, என ஐம்பத்தோர் அட்சரங்களாக பிரித்து செபித்து தியானிக்க வேண்டும்.

***************************************************

http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!