Search This Blog

Dec 12, 2012

சந்திரன் முக்கியத்துவம்


கிரகங்களின் வரிசையில் இரண்டாம் இடம் சந்திரன் 

முன்னுரை: சந்திரனின் முக்கியத்துவம்:
ஜோதிட சாஸ்திரத்தில் நாம் பலன்களையும் எந்தெந்த நேரங்களில் என்ன காரியங்களைத் தொடங்கலாம், எந்த கால கட்டங்களைத் தவிர்க்க வேண்டும் போன்றவற்றையும் தெரிந்து கொள்வதற்கு பல வழி முறைகள் உள்ளன. அந்த வகையில், காலம் காலமாக இருந்து வரும் ஒரு நடைமுறை, சந்திராஷ்டமம்.

ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் பிரதானமாக இருப்பது லக்கினமாகும். இதற்கு அடுத்த நிலையைப் பெறுவது ராசியாகும். ராசி என்பது நாம் பிறக்கும் பொழுது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கின்றதோ, அந்த நட்சத்திரம் அமைந்துள்ள வீட்டைக் குறிப்பதாகும். சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் நாம் ராசி என்கின்றோம். அதே நேரத்தில் புதன் இருக்கும் இடைத்தையோ, குரு இருக்கும் இடத்தையோ நாம் ராசி என்று சொல்வதில். இதில் இருந்து சந்திரனின் முக்கியத்து வத்தை நாம் தெரிந்து கொள்ளலாம். சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துத்தான் பிறந்தநாள் கொண்டாடு கின்றோம். சந்திரன் இருக்கும்  நட்சத்திரம் மூலம்தான் திருமணப் பொருத்தம் பார்கின்றோம். சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துத் தான் ஒருவருக்கு முதல் தசை எது என்று கணிக்கின்றோம். சந்திரன் இருக்கும் ராசிப்படித்ஹான் கோச்சார பலன்களைப் பார்க்கின்றோம். சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை சொல்லித்தான் கோவில்களில் அர்ச்சனை, வழிபாடுகள் செய்கின்றோம்.

இத்தகைய முக்கியத்துவம் பெற்ற சந்திரன் மூலம் நமக்கு யோகங்கள், அவயோகங்கள், தடைகள் ஏற்படுகின்றன. அந்த வகையான இடையூறுகளில் ஒவ்வொரு மாதமும் சந்திரனால் ஏற்படும் தோஷங்களில் "சந்திராஷ்டமம்" ஒன்று.

சந்திராஷ்டமம்:
நீங்கள் பிறந்த ராசிக்கு எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தில் சந்திரன் வருமானால், அதையே சந்திராஷ்டமம் என்கின்றோம். சந்திரன் + அஷ்டமம் = சந்திராஷ்டமம். சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் 'சந்திராஷ்டம காலம்' ஆகும். பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள், மனச்சங்கடங்கள், இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும். மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர் பார்வையாக தனம், குடும்பம், வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தை பார்ப்பதால் அந்த சத்தான அமைப்புக்களும் பாதிப்படைகின்றன.

ஆகையால், இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுப காரியங்களைச் செய்ய மாட்டார்கள். மணமகன், மணமகள் ஆகிய இருவருக்கும் சந்திராஷ்டமம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள். பால் காய்ச்சுதல், கிரகப் பிரவேஷம், வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கும் சந்திராஷ்டமத்தை தவிர்த்து விடுவார்கள். முக்கிய பேச்சு வார்த்தைகளிலும் ஈடுபடமாட்டார்கள். குடும்ப  விஷயங்களையும் பேச மாட்டார்கள். ஏனென்றால், சந்திராஷ்டம தினத்தன்று சந்திரனால் நம் மனதில் சில மாற்றங்கள் உண்டாகின்றன. எதிர் மறையான எண்ணங்கள் தோன்றுகின்றன. ஏனென்றால் சந்திரன் மனோகாரகன். மனதை ஆள்பவன். ஆகையால் நம் எண்ணங்களிலும் கருத்துக்களிலும் நிதானமற்ற நிலை உண்டாகும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.

சந்திரன் ஜெனனஜாதகத்தில் லக்னத்திற்கு ஆறு, எட்டு, பன்னிரெண்டாம் (6,8,12) இடங்களில் மறைந்து இருந்தாலும் உச்சம்,ஆட்சி, நீச்சம் போன்ற அமைப்புக்களில் இருந்தாலும் சந்திராஷ்டமத்தினால் கெடுபலன்கள் ஏற்படுவதில்லை என சில ஜோதிட நூல்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சந்திரன் இருக்கும் இடம்:

சந்திரன் தினக்கோள் ஆகும். வேகமாக சுற்றும் இந்த கிரகம் முப்பது நாட்களில் (ஒரு மாதத்தில்) 12 ராசிகளைக் கடந்து விடும். இப்படிக் கடக்கும் பொழுது தினசரி சந்திரன் இருக்கும் இடத்தைப் பொறுத்து நம் குணாதிசயங்கள் வேறுபடுகின்றது. அதே நேரத்தில் லாப-நஷ்டங்கள், நிறை-குறைகள் ஏற்படுகின்றன. நம் ராசிக்கு சந்திரன் எங்கெங்கு வரும்போது என்னென்ன பலன்கள் ஏற்படும்?

சந்திரன் நாம் பிறந்த ராசியில்
(1)-இல் இருக்கும்பொழுது: மனம் அலை பாயும், சிந்தனை அதிகரிக்கும், ஞாபக மறதி உண்டாகலாம்.
2- இல் இருக்கும் பொழுது: பணவரவுக்கு வாய்ப்புண்டு, பேச்சில் நளினம் இருக்கும். கவிஞர்களுக்கு கற்பனை வளம் மிகும்.  
3- இல் இருக்கும் பொழுது: சமயோசிதமாக செயல்படுதல், சகோதர ஆதரவு, அவசிய செலவுகள்.
4- இல் இருக்கும் பொழுது: பயணங்கள், மனமகிழ்ச்சி, உற்சாகம், தாய் வழி ஆதரவு.
5- இல் இருக்கும் பொழுது: ஆன்மீக பயன்கள், தெய்வபக்தி, நல்ல எண்ணங்கள், தெளிந்த மனம், தாய் மாமன் ஆதரவு.
6- இல் இருக்கும் பொழுது: கோபதாபங்கள், எரிச்சல், டென்ஷன், வீண் விரயங்கள், மறதி, நஷ்டங்கள்.
7- இல் இருக்கும் பொழுது: காதல் நலிந்கங்கள், பயணங்கள், சுற்றுலாக்கள், குதூகலம், பெண்களால் லாபம், மகிழ்ச்சி.
8- இல் இருக்கும் பொழுது: இதைத்தான் சந்திராஷ்டமம் என்று சொல்லுகின்றோம். இந்நாளில் மௌனம் காத்தல் நல்லது. தியானம் மேற்கொள்ளுதல், கோவிலுக்கு சென்று வருதல் நல்லது.
9- இல் இருக்கும் பொழுது: காரிய வெற்றி, சுபசெய்தி, ஆலய தரிசனம்.
10- இல் இருக்கும் பொழுது: பயணங்கள், நிறை-குறைகள், பணவரவு, அலைச்சல், உடல் உபாதைகள்.
11- இல் இருக்கும் பொழுது: தொட்டது துலங்கும், பொருள்சேர்க்கை, மூத்த சகோதரரால் உதவி, மன அமைதி, தரும சிந்தனை.
12- இல் இருக்கும் பொழுது: வீண் வியங்கள், டென்ஷன், மறதி, கைப்பொருள் இழப்பு, உடல் உபாதைகள்.

உங்களுக்குரிய சந்திராஷ்டம நாட்களை எளிதில் அறிந்து கொள்ள உதவும் பட்டியல் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. உங்கள் நட்சச்சத்திரத்திற்கு 17-வது நட்சத்திரத்தில் சந்திரன் வரும் நாளே உங்களுக்கு சந்திராஷ்டம தினமாகும். உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம நட்சத்திரம் தரப்பட்டுள்ளது. அந்தக் குறிப்பிட்ட நட்சத்திர நாளில் நிதானமாகவும், கவனமாகவும் இருப்பது நலம் தரும்.

பிறந்த நட்சத்திரம்
சந்திராஷ்டம நட்சத்திரம்
அஸ்வினி
அணுஷம்
பரணி
கேட்டை
கிருத்திகை
மூலம்
ரோகினி
பூராடம்
மிருகசீரிஷம்
உத்திராடம்
திருவாதிரை
திருவோணம்
புனர்பூசம்
அவிட்டம்
பூசம்
சதயம்
ஆயில்யம்
பூரட்டாதி
மகம்
உத்திரட்டாதி
பூரம்
ரேவதி
உத்திரம்
அஸ்வினி
அஸ்தம்
பரணி
சித்திரை
கிருத்திகை
சுவாதி
ரோகினி
விசாகம்
மிருகசீரிஷம்
அணுஷம்
திருவாதிரை
கேட்டை
புனர்பூசம்
மூலம்
பூசம்
பூராடம்
ஆயில்யம்
உத்திராடம்
மகம்
திருவோணம்
பூரம்
அவிட்டம்
உத்திரம்
சதயம்
அஸ்தம்
பூரட்டாதி
சித்திரை
உத்திரட்டாதி
சுவாதி
ரேவதி
விசாகம்

Dec 6, 2012

மஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்


மஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்
இயற்கையை மீறி எதுவும் நடக்காது’; `எது நடந்தால் என்ன பார்த்துக் கொள்ளலாம்’ – இவையெல்லாம் கிராமங்களில், நாட்டுப்புறங்களில் பேசப்படும் வழக்கு மொழிகள்.

பழம்பெருசுகள் இதுபோல பேசுகிறார்களே என்று சாதாரணமாக அவர்களை எடைபோட்டு விட முடியாது. சவடால் பேச்சுக்கு ஏற்ப அவர்களிடம் விஷயமும் இருக்கும்.

இப்படித்தான் ஒரு நண்பர் வேலை நிமித்தமாக நிறைய ஊர்களுக்குச் சென்று விட்டு, கடைசியாக திருநெல்வேலி பக்கமுள்ள கடையத்திற்குச் சென்றுள்ளார். பல்வேறு ஊர்களில் சுற்றித் திரிந்த களைப்பு, ஆங்காங்கே குடித்த தண்ணீர் என இருமல், சளி என்று மாட்டிக்கொண்டார்.  கடையத்தில் அவர் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் உள்ள வீட்டு திண்ணையில் இருந்த பெரியவர் ஒருவர், நண்பரின் இருமல் சத்தம் கேட்டு அவரை அழைத்தார்.  “என்ன தம்பி, இப்படி இருமுறீக… என்ன உங்களுக்கு உடம்புக்கு…?” “ஒண்ணுமில்ல, தாத்தா. அங்கங்க சுத்துனது ஒத்துக்கல. அதான் இருமல் அதிகமாயிடுச்சி”

“அவ்வளவுதானே, பக்கத்துல இருக்கற பால் கடையில போய், மஞ்சள், மிளகுத்தூள் போட்டு ஒரு பால குடிச்சிட்டு வாங்க. எல்லாம் சரியாப் போயிடும்” – என்றார் பெரியவர்.  அதேபோல் நண்பரும், மிளகுப் பொடி, மஞ்சள் தூள் கலந்து ஒரு 200 மி.லி. அளவு பாலை குடித்து விட்டு அன்று நிம்மதியாகத் தூங்கியுள்ளார். அடுத்த நாளே நல்ல பலன் தெரிந்ததாகக் கூறி, புளகாங்கிதம் அடைந்தார் அவர். சரி, விஷயத்துக்கு வருவோம். நாள்பட்ட சளி, இருமலுக்கு அருமருந்து மஞ்சள் மற்றும் மிளகுத் தூள் என்றால் மிகையாகாது.

விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களும் குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும். இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடைபிடிக்கிறார்கள். மிளகையும், மஞ்சளையும் சமையலில் அன்றாடம் நாம் சேர்த்துக் கொள்வதற்குக் காரணம் அவற்றின் மருத்துவ குணங்களால் தான். பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித்தொழிக்கும் ஆற்றல் பெற்றது. அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது. மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமலாவது, சளியாவது, போயே போயிடும்.


உடல் எடையைக் குறைக்க
உணவில் ஆபத்தான இரசாயனங்கள்
எடையைக் குறைக்கப் போராட்டமா
எந்தெந்த மருந்து எமனாகும்
ஒவ்வாமை (அலர்ஜி)
கணினியும் கண்ணும்
குழந்தைகளுக்காக
கொளுத்தும் கோடையை ‘கூல் டவுன்’ செய்ய
கோடை பானங்கள்
சர்க்கரை நோய் ஒரு பார்வை
சாதிக் அலி
நீரிழிவு நோய்(DIABETES)
டாக்டரிடம் கேளுங்கள்
பகுதி-01 டாக்டரிடம் கேளுங்கள்
பகுதி-02 டாக்டரிடம் கேளுங்கள்
பகுதி-03 டாக்டரிடம் கேளுங்கள்
பகுதி-04 டாக்டரிடம் கேளுங்கள்
பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்
பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள்
பகுதி-07 டாக்டரிடம் கேளுங்கள்
பகுதி-08 டாக்டரிடம் கேளுங்கள்
பகுதி-09 டாக்டரிடம் கேளுங்கள்
பகுதி-10 டாக்டரிடம் கேளுங்கள்
பகுதி-11 டாக்டரிடம் கேளுங்கள்
பகுதி-12 டாக்டரிடம் கேளுங்கள்
பகுதி-13 டாக்டரிடம் கேளுங்கள்
தலைமுடி பிரச்சனையும் மருத்துவமும்
தெரெஸா.ஆர்.கே
இதயநோய்களை தடுக்க
நன்மை தரும் 7 வகை பானங்கள்
மருந்தில்லா மருத்துவம்
பாராதைராய்டு (Parathyroid) – Dr.கே.ராஜா வெங்கடேஷ்
மருந்தும் மறக்கக்கூடாதவைகளும்
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்
ரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்
வாழ வைக்கும் வைட்டமின்கள்
வெந்நீர் மகத்துவம்(மருத்துவம்)
Dr.அம்புஜவல்லி
குடல் புண் (ULSER)
Dr.எம்.கே.முருகானந்தன்
இளநரைக்கு சிறந்த மருத்துவம்
தேன்
முழங்கை வலி
வாய்நாற்றம் (Halitosis)
Dr.நந்தினி
குழந்தை உணவு
Dr.ஷேக் அலாவுதீன்
அழகே வா! அருகே வா!
இரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்
சுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்
வலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்.
விட்டமின் மாத்திரைகளின் மறுபக்கம்
Dr.M.மகேஸ்வரி MBBS
சீறு நீரக கல்(Kidney Stone)
Dr.S.முரளி MDS
நவீன பல் பாதுகாப்பு சிகிச்சை முறைகள்
H.R. Akbar Ali
குழந்தை ஆரோக்கியம்