Search This Blog

Jun 28, 2011

உலகத்திலேயே சிறந்த பண்பாடு இந்திய பண்பாடுதான்! நேற்று இந்தியா! இன்று.?

உலகத்திலேயே சிறந்த பண்பாடு இந்திய பண்பாடுதான்! நேற்று இந்தியா! இன்று?

by Keyem Dharmalingam on Wednesday, June 29, 2011 at 9:24am





 







 நேற்று இந்தியா! இன்று...?

ந்த உலகத்திலேயே சிறந்த பண்பாடு இந்திய பண்பாடு தான் என்ற பெருமிதம் எனக்கு எப்போதுமே உண்டு.  இது நான் இந்தியனாக பிறந்ததனாலோ இந்துவாக வாழ்வதினாலோ உருவானது அல்ல. என் பண்பாட்டை அறிவு பூர்வமாக வாழ்க்கையின் அனுபவபூர்வமாக அறிந்து ஆராய்ந்து தெளிந்த பிறகு ஏற்பட்ட ஞானமாகும்

 மனிதன் தன் வாழ்க்கையில் தாங்க முடியாத துயரம் வரும் போது மட்டுமே அடக்க முடியாமல் அழுகிறான். நெஞ்சிக்குள் அடைத்து கொண்டிருக்கும் துக்கம் பீரிட்டு கிளம்பும் போது பக்க சூழலை எண்ணி பார்க்காது நம்மை வீரனாக நினைத்த மகன் அருகில் இருக்கலாம் அறிஞனாக நினைத்த மாணவன் பக்கத்தில் இருக்கலாம் அவற்றை எதையுமே கவனிக்காமல் பொருட்படுத்தாமல் குதித்து வரும் துயரம் நம்மை குலுங்க குலுங்க அழ வைத்து விடும்.

அப்படி அழுகின்ற போது கூட அதற்கென்று ஒரு நெறியை இலக்கணத்தை வகுத்து கொண்டவன் இந்து.  தலையில் அடித்து கொண்டு அழுகிறான் என்றால் தான் செய்த தவறால் ஏற்றப்பட்ட துயரத்துக்காக என்று அர்த்தம் . நெஞ்சில் அறைந்து கொண்டு கதறுகின்றான் என்றால் நெஞ்சோடு வளர்ந்த பாச உறவை பறிகொடுத்து விட்டான் என்று அர்த்தம்.  வயிற்றில் அடித்து கொண்டு அழுது புரளுகிறான் என்றால் வயிற்ருக்குள் இருந்து வெளிவந்த வாரிசுக்கு ஏற்றப்பட்ட துயரத்திற்கு என்று அர்த்தம்

இப்படி அழுகைக்குள்ளேயே ஆயிரம் தத்துவங்களை புதைத்து வைத்த இந்தியன் தனது வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் அமைதியான மன நிலையை தக்க வைத்து கொள்ளவே சில சடங்குகளை உருவாக்கி இருக்கிறான் என்பதை அறியும்போது இவ்வளவு பெரிய மேதாவிகளின் வாரிசுகளா நாம் என்ற வியப்பு ஏற்படுகிறது. சூரியன் மறைய துவங்கும் மாலை நேரம் வந்தவுடன் வாசலை பெருக்கு தண்ணீர் தெளி கோலம் போடு வீட்டு ஜன்னல் கதவுகளை வாசல்களை திறந்து வை என்றான். அப்படி செய்தால் நிரந்தரமாக மகாலட்சுமி உனது வீட்டில் வாசம் செய்வாள் என்றான். இதற்கு என்ன அர்த்தம்

மாலை நேரத்தில் வீசுகின்ற காற்று தேற்கு திசையில் இருந்து வரும். அதனால் தான் அதற்கு தென்றல் காற்று என்று பெயர் வடக்கே இருந்து வீசினால் அது வாடை காற்று.  வாடை காற்று உடம்புக்கு ஆகாது சீதளத்தை ஏற்படுத்தும் . தென்றல் காற்று அப்படியல்ல உடலில் பட்டவுடன் சரிரத்தை சிலிர்ப்படைய செய்யும்.  கொந்தளிக்கும் மனதை நிதான படுத்தி சாந்தம் ஆக்கும்.  ரத்த கொதிப்பை பட படப்பை மயக்கத்தை தெளிவிக்கும் ஆரோக்கியம் தரும். அந்த தென்றல் காற்று மாலை நேரத்தில் வீடு முழுவதும் வீசினால் இரவு நேர உறக்கம் நிம்மதியாக இருக்கும்.  பல நோய்களுக்கு மருந்தே உறக்கம் அல்லவா?

உடம்பு ஆரோக்கியமாக இருந்தால் உழைப்பதற்கு சலிப்பு ஏற்படாது சலிப்பில்லாத உழைப்பு வீட்டில் செல்வத்தை குவிக்காமல் வேறன்ன செய்யும்?  வாசல் கதவை திறந்து வைப்பதற்கே இத்தனை அறிவியல் காரணங்கள் உண்டென கண்டறிந்த என் இந்திய முப்பாட்டன் ஆயிரம் நோபல் பரிசு வாங்க தகுதி வாய்ந்தவன். காலையில் கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றால் கைகளை தட்டி சத்தம் செய்த பிறகு நீரெடு என என் பாட்டி சொல்வாள். காரணம் ஏன் என கேட்டால் வருண பகவான் உறங்கும் பொழுது நீர் இறைத்தால் அது திருட்டுக்கு சமம் என விளக்கம் சொல்வாள். அப்படி செய்வது திருடு மட்டும் அல்ல கொலையாகவும் முடியும் என்பது ஆராய்ந்தால் புரியும்.

 இரவு நேரம் உலகம் மட்டும் அல்ல நீரும் அமைதியாக இருக்கும். தண்ணீர்ல் வாழும் தவளைகள் நீர் பாம்புகள் மீன்கள் இறைத்தேட நீருக்கு மேல் மேய்ந்து கொண்டு இருக்கலாம். அந்த நேரம் நீர் எடுக்க வாளியை கிணற்றுக்குள் போட்டால் அவைகளுக்கு இடைஞ்சல் ஏற்படும் சில நேரம் அவைகள் காயம் பட்டு இறக்கவும் செய்யலாம். அதை தவிர்க்கவே பாட்டி கைகளை தட்டி தண்ணீர் எடு என சொல்லியிருக்கிறாள்

இப்படி எத்தனையோ விஷயங்களுக்குள் ஆழமான உண்மைகள் மறைந்து கிடக்கின்றன அவைகளை தெரிந்தோ தெரியாமலோ கடைப்பிடித்து நேற்றுவரை நன்றாக வாழ்ந்தோம். இன்றோ அவைகளை நாகரிகம் என்ற பெயரில் ஐரோப்பிய பண்பாட்டிற்கு பலி கொடுத்து விட்டு வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் தவிக்கிறோம்

மனம் மகிழுங்கள் தொடர்-1 “அவன் என்ன செய்வான்? எல்லாம் பழக்க தோஷம்!”

 
மனம் மகிழுங்கள் தொடர்-1
அவன் என்ன செய்வான்? எல்லாம் பழக்க தோஷம்!

இந்த டயலாக் உங்களுக்குப் பழக்கமா? அனைவரும் அறிந்த விஷயம் இது. உள்ளார்ந்து இல்லாவிட்டாலும் அனைவருக்கும் மேலோட்டமாகத் தெரியும், பிறருடைய பழக்கம் நம்மையும் பற்றிக்கொள்ளக் கூடியது. மனிதன் பிறரால் எளிதில் பாதிப்படையக்கூடிய வகையிலேயே மன வடிவமைக்கப்பட்டுள்ளான்.

சில மாதங்கள் மேல்நாடு சுற்றுப்பயணம் சென்றுவிட்டு வந்த உங்கள் நண்பரின் ஆங்கில வாடை மாறியிருப்பதைத் தாங்கள் கண்டிருக்கக்கூடும். மலேஷியா சென்று வந்தவர்களுக்கு லாசேர்ந்திருக்கும். வளைகுடா வாசிகளுக்குகல்லிவல்லிஒட்டியிருக்கும். விரும்பியோ விரும்பாலோ இவை நிகழ்ந்திருக்கக் கூடும். வெள்ளந்தி மனதுடன் மழலையாகப் பேசிக் கொண்டிருக்கும் நமது குழந்தை பள்ளிக்கூடம் சென்று வர ஆரம்பித்ததும், “பா பா ப்ளேக் ஷீப்புடன் சேர்த்து ஒவ்வாத சில வார்த்தைகள் கற்றுக்கொண்டு வந்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இவையெல்லாமே பழக்க தோஷங்கள் தாம். 

நமது சுற்றுப்புறச் சூழ்நிலைக்கேற்ப நமது உடல் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்வதைப்போல் மனதும் உடனே பழக்கப்படுத்திக் கொள்கிறது. நம் குடும்பம், நட்பு, உறவு, அலுவலக சகா, ரேடியோ, டிவி, செய்தித்தாள், புத்தகம், சினிமா, நடிகர்கள், இப்படி நாம் வாழ்க்கையில் தினந்தோறும் எதிர்கொள்ள நேரிடும் அனைத்தும் நமது மனதைத் தாக்கவல்லன. அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள எந்தத் தடுப்பூசியும் கிடையாது. நமது எண்ணங்கள், செயல்கள், உணர்ச்சிகள், லட்சியம் என அனைத்தும் நாம் வாழும் சூழலுக்கேற்ப வடிவமைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. வெய்ட் எ மினிட்! நான் அப்படியெல்லாம் இல்லை. நூறு சதவிகிதம் நான் நானேதான்,” என்று யாராவது சொன்னால் அவர் அனேகமாய் மியூஸியத்திலிருந்து வந்தவராய் இருக்க வேண்டும்.

உடலும் மனதும் சூழ்நிலைக்கேற்பத் தம்மை மாற்றியமைத்துக் கொள்ளும் என்பது இயற்கையின் விதி.

அரசாங்க அலுவலகத்தில் உத்தியோகம் பார்ப்பவர்களின் அலுவல் வேகம் பிரசித்தம். அது, டாக்டர், பயந்தாங்கொள்ளி அரசன் இவையெல்லாம் வார இதழ்களுக்கு நகைச்சுவை எழுதுபவர்களுக்காகவே உலகத்தில் உருவாக்கப்பட்டவை. தனபால் படித்துக் கொண்டிருக்கும் நாளிலிருந்தே சற்று வித்தியாசமாய், நேர்மையாய்ச் சிந்திக்க முற்பட்டவன். நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். தகப்பனார் அந்தக் காலத்து டிஸிப்ளின் பேர்வழி. அவரைப் பொருத்தவரை அரசாங்க உத்தியோகத்தில் கறார் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். தனபாலுக்கு நாட்டுப்பற்றும் அதிகம். அதென்ன நமது அரசாங்கம், நமது நிர்வாகம், நமது அரசாங்க உத்தியோகம் என்றால் இளக்காரம், கேவலம்?” என்ற எண்ணம் அவனுக்குள் குறுகுறுத்துக் கொண்டிருந்தது. அரசாங்க வேலைதான் வேண்டும் என்று சேர்பவர்கள் கூட ஏதோ உழைத்து மக்கள் நலனாற்ற வேண்டும் என்றெல்லாம் இல்லாமல் ஒரு ஜாப் செக்யூரிட்டிக்காகவே அதை நாடியும் சைடில் தனி பிஸினஸ் என்று உழைப்பைக் கொட்டுவதும் கொழிப்பதும் அவனுக்கு ஆத்திரத்தை உண்டு பண்ணிக் கொண்டிருந்தது. ஒரு முடிவெடுத்தான். வங்கியும் பொருளாதார நிறுவனங்களும் வா வாஎன்று அழைக்கும் அத்தனைக் கல்வியும் தகுதியும் இருந்தும் வேலைமெனக்கெட்டு அரசாங்க உத்தியோகம்தான் வேண்டும் என்று சேர்ந்தான். டீ அருந்தப் பத்து நிமிடம் போதுமானதாயிருக்க, அதற்காகவே அலுவலக சகாக்கள் அரை மணிநேரம் செலவிடுவது அதிர்ச்சியையும் எரிச்சலையும் அவனுக்குத் தந்தது.ம்ஹும்! இது தப்பு” ... மிகச் சரியாக பத்து நிமிடம் மட்டுமே தனபாலுக்கு ப்ரேக். எல்லாம் சுயக்கட்டுப்பாடு. ஒரு மாதமாகியிருக்கும். பத்து நிமிடம் பதினைந்தானது. ஒரே வருடத்தில் தனபாலுக்குப் ப்ரமோஷன் ஆகியிருந்தது. வேலையில் இல்லை. டீ ப்ரேக்தான் அரைமணி நேரம் ஆகிவிட்டது! பத்து வருடத்தில் தனபால் டிபிக்கல் அரசாங்க அலுவலனாக ஆகிவிட்டிருந்தான். உதாரணம் மிகையாகத் தோன்றுகிறதோ?

இந்த அரசியல் சாக்கடையைப் பினாயில்,க்ளோரின் பவுடர் போட்டுச் சுத்தப்படுத்துவதே வேலை என்று தனிக்கட்சி ஆரம்பித்து, அத்தனை கட்சியும் கச்சடா, எனவே தனித்துப் போட்டி, தனித்து அரசாங்கம் என்று ஆரம்பத்தில் வேக வேகமாக அரசியல் அரங்கினுள் நுழைபவரைப் பார்த்திருப்பீர்கள். அந்த ஆரம்பக் கலகலப்பில் மக்களும் கவரப்பட்டு ஏதோ நல்லது நடக்கத்தான் போகிறது போலிருக்கிறது என்று சற்று சுவாரசியப் பட்டு நிமிர்ந்து உட்கார்ந்து கவனிக்க ஆரம்பித்திருப் பார்கள். சில வருடங்களே ஆகியிருக்கும். அந்தக் கட்சி, கூட்டணிக்கும் பதவிப் பங்கீட்டிற்கும் தெற்கே, வடக்கே, கிழக்கே, மேற்கே என்று ஆலாய்ப் பறக்க ஆரம்பித்திருக்கும். காலத்தின் கட்டாயம்“, “நிரந்தர நண்பனும் இலலை, பகைவனும் இல்லைஎன்று ரெடிமேட் வாசகங்களுடன் அக்கட்சி தேசிய நீரோட்டத்தில் ஐக்கியமாகிவிட, மக்கள் மீண்டும் சானலைத் மாற்றி எந்த நடிகையின் இடுப்பு மடிப்பு அழகாயிருக்கிறதுஎன்று தங்களது பணியில் மும்முரமாகி யிருப்பார்கள். இதில் விசேஷம் என்னவென்றால், நமக்குள் அத்தகைய மாறுதல்கள், மாற்றங்கள் நிகழ்வது நமது உள்மனதிற்கே தெரியாது. எல்லாம் தானாய் -- இயல்பாய் நிகழ்ந்து கொண்டே இருக்கும். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் எழில்மிகு சென்னையின் மாசுற்ற சூழலையும் துர்நாற்றத்தையும் அசௌகரியத்தையும் நாம் உணர வேண்டுமென்றால் பசுமையான ஒரு கிராமத்திற்கு நாலைந்து நாள் ட்ரிப் சென்றுவிட்டு வரவேண்டும். அதன் பிறகு நமக்குப் புரியும். ஏனெனில் நாற்றத்திலேயே இருக்கும்போது நாசி நாற்றத்திற்குப் பழகியிருக்கும்.

அதனால் உளவியலாளர்கள் என்ன தெரிவிக்கிறார்கள் தெரியுமா?

குற்றம் குறை சொல்பவர்களுடன் உங்கள் சங்காத்தம் இருந்தால் நீங்களும் தொட்டதற்கெல்லாம் குற்றம்குறை சொல்லப் பழகிவிடுவீர்கள். மகிழ்ச்சிகரமான மக்களுடன் பழகினால் உங்களையும் மகிழ்ச்சி தொற்றிக் கொள்ளும். குழப்பவாதி, குளறுபடியாளர் களுடன் இருந்தால் உங்கள் வாழ்க்கை முறையும் குழப்பம்தான். ஆர்வம் நிறைந்த உற்சாக மனிதர்கள் உங்கள் தோஸ்த் என்றால் நீங்களும் உற்சாக மனிதர். ரேஸ் கார் ஓட்டுவது, வீர சாகச வேலைகள் புரிவது என்று சிலருக்கு ஆர்வமிருக்கும். அவர்களுடன் நீங்கள் இணைந்தால் உங்களுக்கும் அந்த ஆர்வம் தோன்றி விடும். எதையும் விவாதித்துக் கொண்டே இருப்பவர்களுடன் உறவாட நேரிடடால், விவாதம் புரிவதே உங்களுடைய இயல்பாகவும் மாறி விட்டிருக்கும்.  

 அதைப் போலவே வெற்றியாளர்களுடன் இணைந்தால் அவர்களது பழக்க வழக்கங்கள், வெற்றிப்பாதை உங்களுக்கும் சொந்தமாகிவிடும். இதிலிருந்து என்ன தெரிகிறது? நாம் யாராக மாற விரும்புகிறோமோ அத்தகையோரைத் தேர்ந்தெடுத்து அவர்களுடன் நமது உறவை அமைத்துக் கொள்ள வேண்டும்.

அது எப்படி முடியும்? தேடித்தான் பெறவேண்டும். கோழி பிரியாணி வேண்டுமென்றால் சரவண பவனில் சென்றா ஆர்டர் தர முடியும்? தலைப்பாக்கட்டுக் கடையைத்தான் தேடவேண்டும்.  ஒருவர் வாழ்க்கையில் நொடித்துப் போனவராக, மன அழுத்தத்தில் உள்ளவராக, உற்சாகமற்றவராக இருந்தால், வெகுநிச்சயமாக அவர் பழகும் நட்பு வட்டாரம் அத்தகையவர்களாகவே இருக்கும் என்று அடித்துச் சொல்கிறார்கள். ஏனெனில் ஒருவர் வாழ்க்கையில் எப்பொழுதுமே அத்தகைய நிலையிலிருந்தால் அது தற்செயல் அல்லவாம். ஆகவே அவர் வாழ்க்கையில் உருப்படுவதற்கு வழிவகை காணவேண்டும் எனில் முதலில் தன்னைச் சுற்றிப் பார்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அதைவிட்டு விலகி வரவேண்டும். அடுத்து நற்குண மக்கள், பண்பாளர்கள் ஆகியோரைத் தேர்ந்தெடுத்து, விண்ணப்பப் படிவம் இருந்தால் பூர்த்தி செய்து கொடுத்து அவர்களுடன் சேர்ந்து கொள்ளவேண்டும். பூவுடன் சேர்ந்து நாரும் மணப்பதைப் போலமனம் மாறும், மகிழ்வுறும். வாழ்க்கையும் தானாய் மாறும்.

அதே நேரம் எச்சரிக்கையும் அவசியம். கெட்ட சமாச்சாரம் எப்பொழுதுமே கவர்ச்சியானது. பண்பாளன் ஒருவன் தட்டுக்கெட்டுப் போய், “கெட்டப் புள்ளைகளுடன் சேர்ந்து கொண்டால், நாருடன் சேர்ந்து பூவும் நாற வேண்டியது" தான்.....மேலும் பயணிப்போம் மனம் மகிழ, வாழ்கை வளமுடன் வாழ, நமது தேடல்களை தொடருவோம்..
பதிவினுக்கு உதவிய வலைதளங்களுக்கு நன்றியுடன்...கே.எம் தருமா...

இனியவை கூறல்:அதிகாரம் 10/133 அறத்துப்பால்:இல்லறவியல்!





திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்! வாழ்க வள்ளுவம்:வளர்க தமிழ்!
இனியவை கூறல்:அதிகாரம் 10/133 அறத்துப்பால்:இல்லறவியல்!

091/1330
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
<a onClick='window.open(http://www.raaga.com/player4/?id=176664
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Pleasant words are words with all pervading love that burn;
Words from his guileless mouth who can the very truth discern.
Explanation :Sweet words are those which imbued with love and free from deceit flow from the mouth of the virtuous.
********************************  
092/1330
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
<a onClick='window.open(http://www.raaga.com/player4/?id=176665
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
A pleasant word with beaming smile,s preferred,
Even to gifts with liberal heart conferred.
Explanation :Sweet speech, with a cheerful countenance is better than a gift made with a joyous mind.
********************************
093/1330
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.
இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
<a onClick='window.open(http://www.raaga.com/player4/?id=176666
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
With brightly beaming smile, and kindly light of loving eye,
And heart sincere, to utter pleasant words is charity.
Explanation :Sweet speech, flowing from the heart (uttered) with a cheerful countenance and a sweet look, is true virtue.
**********************************
094/1330
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
<a onClick='window.open(http://www.raaga.com/player4/?id=176667
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
The men of pleasant speech that gladness breathe around,
Through indigence shall never sorrow's prey be found.
Explanation :Sorrow-increasing poverty shall not come upon those who use towards all, pleasure-increasing sweetness of speech.
*******************************
095/1330
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
<a onClick='window.open(http://www.raaga.com/player4/?id=176668

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Humility with pleasant speech to man on earth,
Is choice adornment; all besides is nothing worth.
Explanation :Humility and sweetness of speech are the ornaments of man; all others are not (ornaments).
********************************
096/1330
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்
இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
<a onClick='window.open(http://www.raaga.com/player4/?id=176669
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Who seeks out good, words from his lips of sweetness flow;
In him the power of vice declines, and virtues grow.
Explanation :If a man, while seeking to speak usefully, speaks also sweetly, his sins will diminish and his virtue increase.
******************************
097/1330
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
<a onClick='window.open(http://www.raaga.com/player4/?id=176670
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
The words of sterling sense, to rule of right that strict adhere,
To virtuous action prompting, blessings yield in every sphere.
Explanation :That speech which, while imparting benefits ceases not to please, will yield righteousness (for this world) and merit (for the next world).
********************************
098/1330
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.
இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
<a onClick='window.open(http://www.raaga.com/player4/?id=176671
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Sweet kindly words, from meanness free, delight of heart,
In world to come and in this world impart.
Explanation :Sweet speech, free from harm to others, will give pleasure both in this world and in the next.
*********************************
99/1330
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.
இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
<a onClick='window.open(http://www.raaga.com/player4/?id=176672
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Who sees the pleasure kindly speech affords,
Why makes he use of harsh, repellant words?
Explanation :Why does he use harsh words, who sees the pleasure which sweet speech yields ?
*******************************
100/1330
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
இணைப்பினை சொடுக்குக, இனிய இசையில், தமிழில் விளக்கத்துடன் கேட்டு மகிழ,
<a onClick='window.open(http://www.raaga.com/player4/?id=176673
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
When pleasant words are easy, bitter words to use,
Is, leaving sweet ripe fruit, the sour unripe to choose.
Explanation :To say disagreeable things when agreeable are at hand is like eating unripe fruit when there is ripe.
********************************